மைசூரு மத்திய செயற்குழு முடிவின்படி வெற்றிகரமாக நடைபெற்ற தமிழகம் தழுவிய தார்ணா போராட்டங்கள்.
கோரிக்கைகள்:-
-
பென்ஷன் மாற்றம் 01-01-2017 முதல் வழங்கப்பட வேண்டும்.
-
01-01-2017 முதல் 50சத IDAவை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.
-
நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
-
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1 அனுமதிக்க வேண்டும்.
-
நிலுவையிலுள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்க வேண்டும்.
-
குடியிருப்பில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.
-
மாதம்தோரும் மருத்துவப்படி ரூபாய். 2000/- வழங்க வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் நீங்கலாக தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக தார்ணா போராட்டம் நடைபெற்றது.
-
போராட்டத்தை விளக்கி AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் உரையாற்றுகிறார்.
சென்னையில் CGM மாநில அலுவலகம் முன்பு போராட்டத்தை வாழ்த்தி BSNLEU AGS தோழர். S. செல்லப்பா உரை.
ஈரோட்டில் நடைபெற்ற தார்ணா
மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 25.5.17 இன்று ஈரோட்டில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம் தலைமை வகித்தார். தோழர் அய்யாசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர் N. சின்னையன் மாநில அமைப்பு செயலாளர் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர்.P. சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர்.L. பரமேஸ்வரன் மாவட்ட செயலாளர் BSNLEU, தோழர் S. முருகேசன் Postal&RMS ஓய்வூதியர் சங்கம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈரோடு கிளை செயலாளர் தோழர். மாணிக்கம் நன்றி கூறினார்.
ஈரோடு மாவட்ட தார்ணா
வேலூர் மாவட்ட தார்ணா
நெல்லை மாவட்ட தார்ணா.
மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 25.5.17 இன்று நெல்லையில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். முத்துசாமி தலைமை வகித்தார். தோழர். S. தாமஸ் மாநில உதவித்தலைவர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தோழர். K. சீதாலட்சுமி மாநில அமைப்பு செயலாளர் BSNLEU, மாவட்ட செயலாளர் தோழர். D. கோபாலன், தோழர். S. நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தோழர். முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.நெல்லை GM அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்ற தர்ணாவில் சுமார் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட தார்ணா.
தூத்துக்குடியில் மாபெரும் தார்ணா – AIBDPA நாடு தழுவிய போராட்டம். 25.05.2017 வியாழக்கிழமை மாலை 0230மணி. தலைமை தோழர். T. சுப்பிரமணியன். முன்னிலை தோழர். T.K. ஸ்ரீனிவாசன். போராட்டத்தை விளக்கி மாவட்டச்செயலர் தோழர். P. ராமர், அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் பேசினர்.போராட்டத்தை வாழ்த்தி BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன், தோழர். A. சந்திரசேகர் மற்றும் பலர் பேசினர். மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார்.
புதுச்சேரி மாவட்ட தார்ணா.
விருதுநகர் மாவட்ட தார்ணா.
25.05.17 அன்று விருதுநகரில் அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி “மாபெரும் தர்ணா” போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 11பெண்கள் உட்பட 64பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். M.அய்யாச்சாமி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், மத்திய மின்சார ஓய்வூதியர் நலச்சங்கம், அரசுபோக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்கம், வங்கி ஓய்வூதியர்களின் சங்கம் மற்றும் AIBSNLEAஆகிய சங்கங்களின் மாவட்டத்தலைவர்கள் பேசினார்கள். தோழர். S. மோகன்தாஸ் (அனைத்திந்திய துணைத் தலைவர்) சிறப்புரையாற்றினார்.
நாகர்கோவில் மாவட்ட தார்ணா
25.05.2017 அன்று நாகர்கோவில் மாவட்ட AIBDPA சார்பில் நடைபெற்ற தார்ணாவை மாவட்டத் தலைவர் தோழர். A. சாஹுல் ஹமீது தலைமை ஏற்றார். அனைத்திந்திய அமைப்புச்செயலர் தோழர். K. காளிபிரசாத் தார்ணாவை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் போராடட்த்தை விளக்கிப் பேசினார். BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர். V. P. இந்திரா, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். P. ராஜூ, NCCPA மாவட்டச் செயலர் தோழர். ராஜநாயகம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தலைவர் தோழர். சிவதாணுபிள்ளை உட்பட பலர் தார்ணாவை வாழ்த்தி பேசினர்.
கோவை மாவட்ட தாரணா
குடந்தை மாவட்ட தார்ணா
திருச்சி மாவட்ட தாரணா.
திருச்சி மாவட்ட AIBDPAன் சார்பில் 25.05.2017 அன்று நடைபெற்ற தார்ணாவை மாவட்டத் தலைவர் தோழர். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச்செயலர் தோழர். ஜான்பாஷா உரை யாற்றினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பி.சின்னையன்கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் சிறப்பாக நடத்திட்ட மாவட்டச்சங்கங்களையும் தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.