• 2024 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

    தோழர்கள் அனைவருக்கும்,

    2024 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

    துன்பங்கள் விலகி

    இன்பங்கள் பெருகி

    இந்த 2024 புத்தாண்டு

    இனிமையாக அமைய

    இனிய புத்தாண்டு

    நல்வாழ்த்துக்கள் !!!

     

  • பென்ஷன் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா

    பென்ஷன் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா

    Medical allowance and bill payments

    Medical allowance and medical reimbursement bills are being paid in Tamilnadu today.

    Thanks to GS Com K.G.Jayaraj and CHQ for continuous efforts.

    R.Rajasekar
    CS AIBDPA TN
    29.12.23

    தோழர்களே,
             இன்று (29-12-2023) பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

    அதேபோல் மருத்துவ அலவன்ஸ் மற்றும் மருத்துவ பில் பேமென்ட் பட்டுவாடா செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

              தோழர்கள் வங்கி கணக்குகளை சரி பார்த்துக் கொள்ளவும்.

    தோழமையுடன்
    R.ராஜசேகர்
    மாநிலச் செயலாளர்.
    29.12.23

  • புதுவையில் NCCPA கிளை துவக்க விழா & ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கு

    புதுவையில் NCCPA கிளை துவக்க விழா & ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கு

     

    தோழர்களே ! தோழியர்களே !!
         புதுவையில் NCCPA அமைப்பின் சார்பில் ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கும் புதுவை NCCPA கிளை துவக்க விழாவும் 29.12.23 அன்று சிறப்பாக நடைபெற்றது. NCCPA அகில இந்திய அமைப்பின் தணிக்கையாளர் தோழர். R. நடராஜன் தலைமை தாங்க தோழர். K. ராதா கிருஷ்ணன் தலைவர் புதுவை மாநில ஓய்வூதியர் சங்கம் கருத்தரங்கிற்கு வந்தவர்களை வரவேற்று துவக்க உரையாற்றினார்.

           தோழர். R. இளங்கோவன் NCCPAஅகில இந்திய உதவித்தலைவர் அவர்கள் ஓய்வூதியம் பற்றியும் ஓய்வூதியருக்கு தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள், புதிய பென்ஷன் திட்ட பாதகங்கள், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதியர் விரோத நிலைபாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ஒன்றுபட்ட இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
    புதுவை மாநில NCCPA கிளையின் தலைவராக தோழர். R. நடராஜன், AIPRPA அவர்களும் செயலாளராக தோழர். K. ராதாகிருஷ்ணன், PPA அவர்களும் பொருளாளராக தோழர் V. ராமகிருஷ்ணன் மாவட்ட தலைவர், AIBDPA அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

               இறுதியில் கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தோழர் R. விடோபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நமது AIBDPA மாவட்ட சங்கத்தின் சார்பில் 31 தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி
    தோழமையுடன்
    V. ராமகிருஷ்ணன்
    மாவட்ட செயலர்
    AIBDPA
    புதுவை மாவட்டம்
    29.12.23.

  • திருநெல்வேலி மாவட்டம் நெல்லை & பாளை கிளைகளின் சிறப்பு கூட்டம்

    திருநெல்வேலி மாவட்டம் நெல்லை & பாளை கிளைகளின் சிறப்பு கூட்டம்

    வணக்கம் தோழர்களே…!!!

        திருநெல்வேலி & பாளையங்கோட்டை கிளைகளின் சிறப்பு கிளைக் கூட்டம் 28-12-2023 வியாழக்கிழமையன்று  காலை 10 மணிக்கு BSNLEU அலுவலகம், வண்ணாரப்பேட்டை திருநெல்வேலி-3 ல் வைத்து நடைபெற்றது. திருநெல்வேலி கிளைத் தலைவர் தோழர் A.அய்யம்பிள்ளை தலைமை தாங்கினார். தோழர். S. செல்லத்துரை கிளைச் செயலர் திருநெல்வேலி அஞ்சலி உரையாற்றினார். தோழர். P. சூசை, கிளைச் செயலாளர் பாளையங்கோட்டை வரவேற்புரை நிகழ்த்தினார்.

                  பூனே மத்திய செயற்குழு அறைகூவல்: பென்சன் ரிவிசன்- மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் அதன் விளைவுகளும் அறிக்கையை தோழர். S. சங்கரநாராயணன் மாவட்ட உதவிச் செயலர் ‌வாசித்தார். தோழர் S.முத்துசாமி மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார்.

                   தோழர். V.சீதாலட்சுமி, அகில இந்திய உதவி பொருளாளர் சிறப்புரையாற்றினார். தோழர். M. கனகமணி, மாவட்டத் தலைவர், தோழர் V. கிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர், தோழர். M. முத்தையா மாவட்ட உதவித் தலைவர், தோழர். S. தங்கசாமி மாவட்ட உதவித் தலைவர் ஆகிய தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். தோழர். முனிஸ்பாரதி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

                   திருநெல்வேலி கிளையின் சார்பில் ரூபாய் 5,000/= மும் பாளையங்கோட்டை கிளையின் சார்பில் ரூபாய் 10,000/= மும் மாவட்ட மாநாட்டிற்கு முதல் தவணையாக நன்கொடை வழங்கினர். நன்கொடை வழங்கிய இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    ச.முத்துசாமி,
    மாவட்ட செயலாளர்,
    நெல்லை மாவட்டம்.
    28-12-2023.

  • Com. G. G. Patil, veteran leader passed away

    Com. G. G. Patil, veteran leader passed away

    It is with great sorrow that it is intimated that Com. G. G. Patil, veteran leader of the telecom workers and pensioners passed away at a Bangalore hospital today, 29.12.2023 at 02.00 pm. where he was under treatment. He was only 80.

    He was a very sincere and dedicated leader who was liked by all. Despite his ill health he used to attend all programmes and encourage other comrades. He was a father figure to all other comrades. His contribution in strengthening BSNLEU and AIBDPA is well appreciated.

    Convey my heartfelt condolences to the bereaved family.

    Red Salute to Com. G. G. Patil!

    V A N Namboodiri 29.12.2023

  • வெண்மணி சங்கமம் 25-12-2023

    வெண்மணி சங்கமம் 25.12.23

    தோழர்களே,

                         வெண்மணி 44 உயிர்கள் ஆதிக்க சமூகத்தினால், நில உடமையாளர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட கொடூரம்.
                    55 ஆண்டு காலமாக அந்தத் தனல் இன்னும் மக்கள் மத்தியில் வெந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணஓலம் நம் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகள் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது நடைமுறை.

                  AIBDPA தமிழ் மாநில சங்கம் கடந்த ஆண்டு கும்பகோணம், தஞ்சை தோழர்களிடம் தகவல் கொடுத்து மாநில சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்த கேட்டுக் கொண்டோம். அது நன்றாக நடைபெற்றது.

                  இந்த ஆண்டு மாநிலச் சங்க செயற்குழுவில் முடிவு எடுத்து அதனை ஒரு மாநில நிகழ்வாக நடத்துவதற்கு திட்டமிட்டோம். பல இன்னல்கள் இருந்தன. தென் மாவட்டங்களில் தொடர் மழை, வெள்ளம். பல இடங்களில் புதுவித நோய்கள். எனினும் அந்த நிகழ்வினை நடத்துவது என்று தீர்மானித்தோம்.

            திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கோயம்புத்தூர் மாவட்ட சங்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தோழர்கள் ஒரு கணிசமான அளவில் வந்திருந்தார்கள் நாகப்பட்டினம் கிளை தோழர்கள் முழுமையாக கலந்து கொண்டார்கள். 80 க்கும் மேற்பட்ட தோழர்களோடு நம்முடைய மாநில சங்கத்தின் அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

                வந்திருந்த தோழர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபம், காலை சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தோம்.

    தோழர்களே,
                        இந்த நிகழ்வினை வெற்றிகரமாக்குவதற்கு உதவி செய்த நாகை தோழர்கள் தோழர் P. செல்வராஜ் மாவட்ட தலைவர், தோழர் K.மணிவண்ணன் மாவட்ட செயலாளர், தோழர் M.குருசாமி மாநிலத் அமைப்பு செயலர், தோழர் அருட்பெரும் ஜோதி காரைக்கால், தோழர் P. சண்முகம், தோழர் K. மேகநாதன் ஆகியோர் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
    இரண்டே நாட்களில் இந்த பெரும் பணியினை சிறப்பாக செய்து முடித்த அத்தனை தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

             மாநில சங்கம் வெண்மணி தியாகிகள் அஞ்சலி நிகழ்வை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இருந்து தோழர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
    *நிச்சயமாக அந்த வர்க்க பணி தொடரும்*.

    தோழமை வாழ்த்துக்களுடன்
    ஆர் ராஜசேகர்
    மாநில செயலாளர்
    26 12 23

  • மாதம் தோறும் கூட்டம் நடத்தும் கோவை அவனாசி கிளை

    மாதம் தோறும் கூட்டம் நடத்தும் கோவை மாவட்ட அவனாசி கிளை

    வாழ்த்துகிறோம் !!!!

              தமிழகத்தின் 100 ஆவது கிளையான அவிநாசி கிளை மாதம் தோறும் கூட்டம் நடத்தும் அவனாசி கிளையின் மாநாடு கடந்த மாதம் கிளை மாநாடு 27 ஆம் தேதி முடித்து சரியாக ஒரே மாதத்தில் தனது கிளை மாநாட்டிற்கு பிறகு தனது முதல் கூட்டத்தை 27.12.23ல் நடத்தியுள்ளது. கிளைக் கூட்டம் கிளை தலைவர் தோழர். ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையில் நடந்தது. தோழர். கணேசன் கிளைச் செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். 13 தோழர்களில் 11 தோழர்கள் பங்கெடுத்தனர்.

          மாவட்டச் செயலாளர் தோழர். குடியரசு மாவட்டச் சங்க செய்திகளையும் ஒவ்வொரு குடும்பங்களின் மீதும் எப்படி அக்கறை செலுத்துகிறது என்று பல்வேறு உதாரணங்களை எடுத்துச் சொல்லி வாழ்த்துரை வழங்கினார். தோழர். T.K. பிரசன்னா மாநில அமைப்பு செயலாளர் சம்பள கமிஷன் இன்றைய சூழலும் பற்றியும் ஓய்வூதியும் எப்படி வந்தது என்றும் அகில இந்திய, மாநில சங்க செய்திகளை அழகாக எடுத்து வைத்தார்.

             தோழர். கணேசன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். தோழர்களே நூறாவது கிளை ஆனாலும் ஒவ்வொரு மாதமும் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களுக்கு சேர்க்க வேண்டிய தகவலை மாதம் தோறும் கொடுக்கக்கூடிய அவிநாசி கிளை சங்கத்தை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

                  நூறாவது கிளை என்றாலும் மாதந்தோறும் 100% கிளைக் கூட்டத்தை நடத்த உத்தரவாதப்படுத்துவது நமது மாவட்டத்திற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இனி வரும் காலங்களில் அவனாசி கிளைச் சங்கம் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதி கிளைக் கூட்டம் நடத்துவது என்றும் அந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஞாயிறு மற்றும் விடுமுறையாக இருந்தால் அடுத்த நாள் கிளைக் கூட்டம் நடத்தும் என்ற ஒரு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளை சங்கத்தின் பணி சிறக்க தொடர மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

    குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்.

  • நெல்லை மாவட்டம் அம்பை கிளையில் சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்

    நெல்லை மாவட்டம் அம்பை கிளையில் சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்


    வணக்கம் தோழர்களே…!!!

                அகில இந்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 26.12.2023 அன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் சிறப்பு கூட்டம் மற்றும் பிரச்சார இயக்கமும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் தோழர். P. முருகன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

                      அகில இந்திய உதவிப் பொருளாளர் தோழியர். V. சீதாலட்சுமி மற்றும் மாவட்ட உதவித் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் ஆகியோர் அகில இந்திய செயற்குழு முடிவுகள் பற்றியும், சம்பளக் கமிஷனில் ஏற்பட்டிருக்கும் நிலைகள் பற்றியும் சிறப்புரையாற்றினர்.

         நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர் V. கல்யாணி நன்றி கூறினார்.

                       சிறப்புக் கூட்டம் நடத்தி மாவட்ட மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூபாய் 9000/= (ரூபாய் ஒன்பது ஆயிரம்) நன்கொடை வழங்கிய அம்பாசமுத்திரம் கிளையை மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டி புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

    கலந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்…

    தோழமையுடன்,
    _ச.முத்துசாமி_ ,
    மாவட்ட செயலாளர்,
    நெல்லை மாவட்டம்.
    26/12/2023.
    ????????????????????????????????

  • வெண்மணி தியாகிகள் செவ்வணக்க நிகழ்வு படங்கள்

    வெண்மணி தியாகிகள் செவ்வணக்க நிகழ்வு படங்கள்

                        On 25.12.23 venmani martyrs day AIBDPA Tamilnadu Circle union with more than 80 comrades attended to pay red salute to the martyrs.
            வெண்மணி தியாகிகள் செவ்வணக்க நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட தோழர்களோடு AIBDPA தமிழ் மாநில சங்கம்.

  • வெண்மணி தியாகிகளுக்கு செவ்வணக்கம் !!

    வெண்மணி தியாகிகளுக்கு செவ்வணக்கம்