Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA விரிவடைந்த கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற AIBDPA விரிவடைந்த கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

  




தோழர்களே ! வணக்கம்.

         கடலூர் மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (31.10.2023) மாவட்டத் தலைவர் தோழர். N. மேகநாதன் தலைமையில் கடலூரில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட உதவிச் செயலர் தோழர். A. அண்ணாமலை அஞ்சலிவுரை ஆற்றினார். மாவட்ட செயலர் தோழர். I.M. மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    செயற்குழுவை துவக்கிவைத்த மாநில பொருளாளர் தோழர். S. நடராஜா தனது உரையில், நமது சங்கத்தின் சாதனைகளை விளக்கி உரையாற்றினார். கிளைச்சங்க செயல்பாட்டை மேம்படுத்திட,உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்திட ஆலோசனை வழங்கினார்.

 



       பின்னர் மாவட்டச் செயலர் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் சங்க வரவு செலவு கணக்கினை மாவட்ட பொருளாளர் தோழர். B. சந்திரசேகரன் சமர்ப்பித்தார். அறிக்கை மற்றும் அஜெண்டா மீது 11 தோழர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்தில் தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட செயலர் விளக்கமளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

            செயற்குழுவில் கலந்து கொண்ட BSNLEU மாவட்ட செயலர் தோழர். S. சொளந்தர்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி பென்சன் மாற்றம்-தற்போதைய நிலை குறித்து விரிவாக விளக்கவுரையாற்றினார்.

        கடலூர் மாவட்டம் சார்பில், சென்னையில் நடைபெறும் NCCPA அகில இந்திய மாநாட்டு நன்கொடை முதல் தவணையாக ரூ.5,000/- மாநில பொருளாளரிடம் வழங்கப்பட்டது.

எடுக்கப்பட்ட முடிவுகள்

1.சென்னையில் நடைபெறும் NCCPA அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக உறுப்பினர்கள் ரூ.100/- வழங்கிட வேண்டும்.

2.மாநில சங்க முடிவின் அடிப்படையில் கிளை மாநாடுகளை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்திட, உடனடியாக கிளைக்கூட்டங்களை நடத்தி திட்டமிட வேண்டும்.

3.கிளைக்கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும்.

4.உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்திட,கிளைச் சங்கங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

      இறுதியில் மாவட்ட உதவிச்செயலர் தோழர். A. அண்ணாமலை நன்றி கூறினார்.

      விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்ட மதிய உணவுக்கு ரூ.3,000/- நன்கொடை வழங்கிய சிதம்பரம் கிளைத் தலைவர் தோழர். A. மகாலிங்கம் அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்.

விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 40 தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

         விரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகளை அமுலாக்கிட அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

தோழமையுடன்,
I.M.மதியழகன்
மாவட்ட செயலர்.

Post a Comment

0 Comments