Latest

10/recent/ticker-posts

25. 11 .2023ல் சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட கரூர் கிளை மாநாடு

25. 11 .2023ல் சிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட கரூர் கிளை மாநாடு





25-11-2023 அன்று காலை 9.30 மணி அளவில் கரூர் பஜார் தொலைபேசி நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட கரூர் கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக AIBDPA சங்கக் கொடியை மாவட்ட தலைவர் தோழர். ஜான் பாஷா, விண் அதிரும் கோஷங்களோடு சங்க கொடியை ஏற்றி வைத்தார். 

  




      இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் தோழர். எஸ் நடராஜா, மாவட்டச் செயலாளர் தோழர். கே. சின்னையன், மாநில அமைப்பு செயலாளர் தோழர். டி. தேவராஜ் மற்றும் கிளையின் தோழர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் நடைபெற்ற கிளை மாநாட்டை தோழர். P. இளங்கோவன் தலைமையேற்று நடத்தினார். அஞ்சலியை தோழர். N. சேட்டு நிகழ்த்தினார். தோழர். T. மனோகரன் அனைவரையும் வரவேற்றார். கிளை மாநாட்டை திரு. கிருஷ்ணமூர்த்தி. AGM KARUR அவர்கள் வாழ்த்தி பேசினார். துவக்க உரையாற்றிய தோழர். S. நடராஜா மாநில பொருளாளர் பென்ஷன் ரிவிஷன், மெடிக்கல் பில் மற்றும் சொசைட்டி வழக்கில் உள்ள பிரச்சனைகளை பற்றி விரிவாக பேசினார்.

      அதன் பின் மாவட்ட செயலாளர் தோழர். கே. சின்னையன் அவர்கள் திருச்சி மாவட்டத்தினுடைய உறுப்பினர் வளர்ச்சி மற்றும் மெடிக்கல் பில் சம்பந்தமான நிலுவை விவரங்களை பற்றி பேசினார். ஆண்டறிக்கையை கிளைச் செயலாளர் T. மனோகரன் சமர்ப்பித்தார். அதன்பின் வரவு செலவு கணக்கை தோழர். P. நாகராஜன் கிளை பொருளாளர் சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை வரவு செலவு கணக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன் பின் நிர்வாகிகள் தேர்வை தோழர். K. சின்னையன் மாவட்டச் செயலாளர் நிகழ்த்தினார் நிர்வாகிகளாக கிளைத் தலைவராக தோழர். N. சேட்டு பள்ளப்பட்டி, செயலாளராக தோழர். டி. மனோகரன், கரூர் பொருளாளராக தோழர். P. நாகராஜன் இவர்களோடு 13 கிளை நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

      புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர். சுப்பிரமணியம், CITU மாவட்டத் துணைத் தலைவர் கரூர். BDPA சங்கத்தின் மாவட்ட நிர்வாகி திரு. K. ஜெயபால் மற்றும் ஐ. ஜான் பாஷா மாவட்ட தலைவர் தோழர். T. தேவராஜன் மாநில அமைப்பு செயலாளர் ஆகியோர் பேசினர். மாநாட்டில் இரண்டு புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர். நன்றியுரையை தோழர் P. நாகராஜன் கூறியபின் இனிதே மாநாடு முடிவுற்றது.

Post a Comment

0 Comments