Latest

10/recent/ticker-posts

சிறப்புடன் நடைபெற்ற AIBDPA-ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்

AIBDPA-ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்

 



           இன்று 6.11.23 ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் தோழர். முகமது ரபிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கடந்த ஒரு மாத காலம் நடைபெற்ற 16 கிளை மாநாடுகள் பற்றி மாவட்ட செயலாளர் பேசினார்.

 



           பின்னர் ஈரோடு மாவட்ட மாநாடு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் மாநில துணைத் தலைவர் தோழர். N. குப்புசாமி மற்றும் மாநில துணைச் செயலாளர் தோழர். L. பரமேஸ்வரன் கலந்து கொண்டனர். விவாதத்தில் 16 கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். வரும் 17.12.23 அன்று ஈரோடு N. R. திருமண மண்டபத்தில் மாவட்ட மாநாடு ஒரு நாள் மாநாடாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

                மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர் மாநாட்டினை துவக்கி வைக்கின்றார். மாநாட்டின் பொது அரங்க நிகழ்வில் நமது பொது மேலாளர் (G M. BSNL) அவர்களையும் DRPU தலைவர் தோழர். இளங்கோவன் அவர்களையும் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

                   NCCPA அகில இந்திய மாநாட்டிற்கு ரூபாய் 15,000/- முதல் தவணையை உடனே அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் ஜனவரி மாதம் ஈரோட்டில் நடைபெற உள்ள TNTCWU மாநில மாநாட்டிற்கு நன்கொடை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

       பென்சன் மாற்றம் சம்பந்தமாக தீர்வு ஏற்படவில்லை என்றால் நமது மத்திய செயற்குழு போராட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. மாவட்ட பொருளாளர் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

                  குடும்ப ஓய்வூதியர்கள் பென்சன் கோரிக்கையில் மிகுந்த கால தாமதம் ஆகி உள்ளது. எனவே மாநில சங்கம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மாவட்ட செயற்குழு கூட்டம் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் போல் 42 தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்டச்சங்கம் சார்பில் நன்றி.

சின்னசாமி மாவட்ட செயலாளர்
ஈரோடு

Post a Comment

0 Comments