Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்டம் அவினாசி ஓய்வூதியர் கிளை மாநாடு

கோவை மாவட்டம் அவினாசி ஓய்வூதியர் கிளை மாநாடு

  





       இன்று 29-11-2023 கோவை மாவட்டம் அவினாசி ஓய்வூதியர் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளை தலைவர் தோழர். எம். சுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். முதல் நிகழ்வாக மாநாட்டின் கொடியை மூத்த தோழர். கருப்புசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்.

           அடுத்து மாநாட்டை அவினாசி கிளைச் செயலாளர் தோழர். கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .மாவட்டச் செயலாளர் தோழர். குடியரசு அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அடுத்து அறிக்கை வைத்து விவாதம் நடைபெற்றது.

          அடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலாளர் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய நிர்வாகிகளாக கிளைத் தலைவராக தோழர். டி. ஆரோக்கியநாதன், துணைத் தலைவராக எம். சுப்பிரமணியம், செயலாளராக தோழர். கணேசன், துணைச்செயலாளராக ஆர். ரவீந்திரன் பொருளாளராக எம். பழனிச்சாமி அமைப்புச் செயலாளர்களாக தோழர் [1] ஏ .கைத்தமலை [2] சையது முகமது கலீல் தேர்வு செய்யப்பட்டனர்.

      புதிய கிளை நிர்வாகிகளை வாழ்த்தி மாநில அமைப்பு செயலாளர் தோழர். ஏ. முகமது ஜாபர் அவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர். தோழர். சௌந்தரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வந்திருந்த மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் கௌரவிக்கும் வகையில் துண்டு அணிவிக்கப்பட்டது.

     கிளை மாநாட்டை நிறைவுறையாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளையின் தலைவர். டி ஆரோக்கியநாதன் அவர்கள் நன்றி கூறி அகில இந்திய சங்கத்திற்கு ஆயிரம் ரூபாய் டொனேஷன் ஆகவும் மாநில சங்கத்திற்கு ஆயிரம் ரூபாய் டொனேஷன் ஆகவும் மாவட்டச் சங்கத்திற்கு ஆயிரம் ரூபாய் டொனேஷன் ஆகவும் திருப்பூர் கிளை சங்கத்திற்கு 500 ரூபாயும் அவனாசி கிளைக்கு 500 ரூபாய் டொனேஷன் ஆகவும் வழங்கி நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments