ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஈரோடு பகுதி கிளை செயலாளர்கள் கூட்டம்
November 24, 2023
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஈரோடு பகுதி கிளை செயலாளர்கள் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 25.11.23 இன்று காலை ஈரோடு பகுதி கிளை செயலாளர்கள் கூட்டம் மாவட்ட துணை தலைவர் தோழர் C. பரமசிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஆறு கிளை செயலாளர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் 9 பேரும் கலந்து கொண்டனர். மேலும் கிளைச் சங்க நிர்வாகிகள்10 பேர் கலந்து கொண்டனர்.
நடைபெற உள்ள ஈரோடு மாவட்ட மாநாடு, உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட மாநாடு நன்கொடை மற்றும் நடைபெற உள்ள NCCPA அகில இந்திய மாநாடு ஆகியவை சம்பந்தமான விவரங்களை மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி அவர்கள் தெரிவித்தார்
24.11.23 அன்று இணைய தளத்தின் மூலம் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள் பற்றி மாநில துணை தலைவர் தோழர். N. குப்புசாமி அவர்கள் பேசினார்கள். விவாதத்தில் கிளை செயலாளர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. கிளை செயலாளர்கள் மாவட்ட மாநாடு அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து கொடுக்க வேண்டும். நன்கொடை வழங்காத தோழர்களிடம் நன்கொடை பெற முயற்சி செய்ய வேண்டும்.
புனே வில் நடைபெற்ற மத்திய சங்கம் மற்றும் மாநில செயற்குழு முடிவு அடிப்படையில் (பென்சன் மாற்றம் பற்றி ஒரு வார கால பிரச்சார இயக்கம்) ஈரோடு பகுதியில் உள்ள கிளைகளின் இணைந்த கூட்டம் வரும் 28.11.23 மாலை 3.00 மணிக்கு டெலிபோன் பவனில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
28.11.23 மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை AUAB நடைபெற உள்ள மனித சங்கிலி இயக்கத்தில் நமது தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்ய பட்டுள்ளது.
NCCPA அகில இந்திய மாநாடு டிசம்பர் 13, 14 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி அவர்கள் பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்.
அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு SKM சார்பில் 26/11 மற்றும் 27/11 தேதிகளில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் தோழர். குப்புசாமி மாநில துணை தலைவர் கலந்து கொள்கிறார்.
மாவட்ட மாநாடு அழைப்பிதழ் கோபி, சத்தி, கவுந்தப்பாடி, பவானி மற்றும் அந்தியூர் கிளைகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு நகர செயலாளர் களுக்கு நேரில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments