Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட குறிச்சி கிளை மாநாடு !!

சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட குறிச்சி கிளை மாநாடு !!

   




தோழர்களே !
அருமையான /மிகச்சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட குறிச்சி கிளை மாநாடு 21.11.23. கிளை மாநாடு தோழர் M.மதனகோபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 60 சதமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமை உரைக்குப் பின் அஞ்சலி நிகழ்ச்சி தோழர். A. கணேசன் SDE RTD நடத்தினார். தொடர்ந்து வரவேற்புரை தோழர் P.M.நாச்சிமுத்து கிளைச் செயலர் நடத்தினார்.

      அதைத்தொடர்ந்து தோழர் குடியரசு மாவட்ட செயலாளர் கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட சங்கத்தின் செயல்பாடு மாநிலச் சங்க செயல்பாடு, DLC, PRC,, சொசைட்டி சம்பந்தமான விவரங்கள் அகில இந்திய சங்க செயல்பாடு தற்போது மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் அகில இந்திய செயற்குழு செயல்பாடு பற்றி விரிவாக எடுத்துக் கூறி மாநாட்டை துவக்கி வைத்தார்.

 



            அடுத்து தோழர் T.K.பிரசன்னா அவர்கள் C.O.S சம்பளக் கமிஷனில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மத்திய மாநில சங்கம் இயக்கங்கள் சம்பந்தமாக அகில இந்திய செயற்குழு பற்றி விரிவாக எடுத்துரைத்து பேசினார். அதைத்தொடர்ந்து N.P. ராஜேந்திரன் DT DLC பற்றியும், தோழர். நிசார் அகமது CAT, தோழியர். S.மகுடேஸ்வரி CCI C.G.,BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். மகேஸ்வரன், TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். முத்தலிப், EX.A.A.T. தோழியர் பங்கஜவல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       அதைத்தொடர்ந்து கிளைச் செயலர் தனது செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். தோழர் லாரன்ஸ் தோழர் முருகன் மற்றும் சூரிய கலா ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். ஓரிரு திருத்தங்களோடு அறிக்கை ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிதிநிலை அறிக்கை வரவு ஏதும் இல்லாத காரணத்தினால் செலவு மட்டுமே உள்ளது என தலைவர் கூறி அடுத்த கிளைக் கூட்டத்தில் நிதி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபையின் ஒப்புதல் பெற்றார். அதைத்தொடர்ந்து வந்திருந்த மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

      மிக மூத்த தோழர் ஷரீப் (77) கிளை மாநாட்டில் துண்டு அணிவித்த கௌரவிக்கப்பட்டார். புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு மாவட்ட செயலாளர் நடத்தி வைத்தார். கிளைத் தலைவராக தோழர். M. மதனகோபாலன், கிளைச் செயலாளராக தோழர். M.பஷீர், கிளைப் பொருளாளராக தோழர். K. இராதாகிருஷ்ணன் முக்கிய நிர்வாகிகளாக வும்,14 இணை நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏக மனதாக ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து கிளை பொருளாளர் தோழர். K. இராதாகிருஷ்ணன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்.

Post a Comment

0 Comments