Latest

10/recent/ticker-posts

BSNLEU- AIBDPA- TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்ட முடிவுகள் !!

 

15-11-2023 அன்று நடைபெற்ற BSNLEU- AIBDPA- TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்ட முடிவுகள்

          ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அதன் தலைவர் தோழர் R.ராஜசேகர் அவர்கள் தலைமையில் 15-11-2023 அன்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ் கண்டமுடிவுகள் எடுக்கப்பட்டது.

முடிவுகள்:

28-11-2023 அன்று 3 அம்ச கோரிக்கையை முன் வைத்து JOINT FORUM நடத்த உள்ள மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று BSNLEU விடுத்த அழைப்பை ஏற்று, 28-11-2023 அன்று JF சார்பாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் AIBDPA, TNTCWU தோழர்களை கலந்து கொள்ள செயவது.

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஆகியவை இணைந்து, 26.11.2023 முதல் 28-11-2023 வரை சென்னையில் மகா பதவ் நடத்த உள்ளன. 28.11.2023 அன்று, அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற உள்ளதால், இந்த போராட்டத்திற்கு 26.11.2023 அன்று COC சார்பாக அனைத்து மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான தோழர்களை கலந்து கொள்ள செய்வது என்றும் 27.11.2023 அன்று சென்னையில் உள்ள தோழர்களை பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட முடிவுகளை சிறப்பாக அமல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும், உடனடியாக, COC கூட்டத்தை கூட்டி திட்டமிட வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களையும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

வாழ்த்துக்களு டன்,
P. ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

Post a Comment

0 Comments