12-12-2023 இன்று நாகர்கோவில் GM அலுவலகத்தில் உள்ள BSNLEU சங்கத்தில் வைத்து நடைபெற்ற AIBDPA நாகர்கோவில் கிளை கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர். S. முகமது ராபி தலைமை தாங்கினார். மறைந்த தோழியர் ரேணுகாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை செயலாளர் தோழர். P. K. ஜிதேந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார்.
மாவட்டச் செயலாளர் தோழர். க. ஜார்ஜ் துவக்க உரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தோழர். A. மீனாட்சிசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். R. சுயம்புலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
பூனே மத்திய செயற்குழு முடிவின்படி மத்தியச்சங்க ஆங்கில சுற்றறிக்கை தமிழாக்கமாக 8 பக்க அறிக்கை நோட்டிசாக தோழர்களுக்கு கொடுக்கப்பட்டது. கிளைப் பொருளாளர் தோழர். B சுப்பிரமணியன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
0 Comments