Latest

10/recent/ticker-posts

16.12.23ல் கோவையில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கொண்டாட்டம்

16.12.23ல் கோவையில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கொண்டாட்டம் !!

 






தோழர்களே !!

           16.12.23 இன்று கோவை மாவட்டத்தில் மத்திய மாநில பொதுத்துறை ஒருங்கிணைப்புக் குழு ஓய்வூதியர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். 17.12.23. ஓய்வூதியர் தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் சனிக்கிழமை அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இக்கூட்டம் மாவட்ட உதவித் தலைவர் தோழர். T. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

           மாவட்டச் செயலாளர் தோழர். அரங்கநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 470 க்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். நமது அமைப்பின் சார்பாக தோழர். B. சௌந்தரபாண்டியன் மாவட்ட தலைவர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நமது சங்கத்தின் சார்பாக நகர்ப்புற கிளைகள், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி கிளைகளின் சார்பாக 76 தோழர்கள் பங்கேற்றனர்.

             80 வயதை கடந்து 20% ஊக்க ஊதியம் பெறக்கூடிய 15 ஓய்வூதிய தோழர்கள் துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். NCCPA அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர். S. கருணாநிதி மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக தோழர். செந்தமிழ் செல்வன் சிறப்புரையாற்றினார். மற்ற அரங்கத்தை சார்ந்த அந்தந்த அமைப்பு மாவட்ட செயலாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அனைத்து துறைகளையும் உள்ளடக்கி பழைய ஓய்வூதிய திட்டம் தொடரவும் கடைசியாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 15 சதமான ஓய்வுதிய பலனையும் 1.1.2017 லிருந்து கட்டாயம் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தோழர் குடியரசு நன்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments