18-12-2023ல் - கோவை பகுதி - திருப்பூர், பல்லடம், அவனாசி கிளைகளின் இணைந்த சிறப்பு கூட்டம்
December 21, 2023
18-12-2023ல் - கோவை பகுதி - திருப்பூர், பல்லடம், அவனாசி கிளைகளின் இணைந்த சிறப்பு கூட்டம்
தோழர்களே !! 18.12.2023 அன்று கோவை மாவட்டம் திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் வைத்து ஓய்வூதியர் சங்க கிளைகளின் இணைந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் பகுதி, பல்லடம் பகுதி, அவனாசி பகுதி உள்ள தோழர்கள் பங்கேற்றனர்.
ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர் அவர்கள் சிறப்பான உரையை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர்.A. குடியரசு அவர்கள் நமது மாவட்ட பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மாவட்டத் தலைவர் தோழர். B. சௌந்தரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
கூட்டம் திருப்பூர் கிளைத் தலைவர் தோழர். ரத்தினம், அவனாசி கிளைத் தலைவர் தோழர். ஆரோக்கியநாதன் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். விசுவநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவனாசி கிளைச் செயலாளர் தோழர். கணேசன் அவர்களும் பல்லடம் கிளைச் செயலாளர் தோழர். முருகசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் .
திருப்பூர் பகுதியில் புதியதாக 10 ஓய்வூதியர் சந்தா மாவட்டச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. நிறைவாக தோழர். பழனிவேல்சாமி நன்றியுரை வழங்கினார்.
0 Comments