Latest

10/recent/ticker-posts

நவம்பர் 30ல் லைவ் சர்டிபிகேட் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை வழங்க ஏற்பாடு

நவம்பர் 30ல் லைவ் சர்டிபிகேட் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை வழங்க ஏற்பாடு

தோழர்களே,

          நவம்பர் 30 அன்று ஆயுள் சான்றிதழ் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை தரலாம். நமது மாநிலச் செயலாளர் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்களும் மழையின் காரணமாக வாழ்வு சான்றிதழ் கொடுப்பதில் தலமட்டத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என்பதனை தெளிவாக தெரிவித்து விட்டார்கள்.

          இன்று மதியம் 3 மணி வரை வாழ்வு சான்றிதழ் கொடுக்காதவர்கள் எண்ணிக்கை மாநில மட்டத்தில் 2022. இதில் சென்னை, சென்னை தொலைபேசி பெரியளவு அடங்கும். மீதம் உள்ளவர்கள் தான் 18 டெலிகாம் மாவட்டங்களில் இருப்பார்கள்.

             ஆகவே மாவட்டங்களில் 50 முதல் 60 வயது தான் இந்த எண்ணிக்கை இருக்கலாம் என்பது எங்களது கணிப்பு. அதில் நமது உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதையும் பார்க்க வேண்டும்.

        ஆகவே மாவட்ட செயலாளர்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் இதை சற்று ஆராய்ந்து நம்முடைய உறுப்பினர்களை உடனடியாக வாழ்வு சான்றிதழ் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும். நிர்வாகமும் மாதத்தின் கடைசி தேதி வரை RPT கடைசி தேதி வரை காத்திருப்பதற்கு உறுதி அளித்துள்ளார்கள்

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர்.
மாநில செயலாளர்
23.12.23

Post a Comment

0 Comments