10.12.2023 ஞாயிறு இன்று AIBDPA எடப்பாடி கிளைக்கூட்டம் தோழர் விஜயசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் கிளைச் செயலர் தோழர் P.சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
AIBDPA தலைவர் தோழர் P.தங்கராஜு அவர்கள் துவக்க உரையில் BSNLEU, AUAB கோரிக்கைகள், 4G,5G BSNL க்கு பெற நமது போராட்டங்கள், ஓய்வூதியர் பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
BSNLEU மாவட்ட உதவிச் செயலாளர் தோழர் சண்முகசுந்தரம், AIBDPA மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் G.நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டச் செயலாளர் தோழர் S. தமிழ்மணி புனே மத்திய செயற்குழு முடிவுகள், பென்சன் மாற்றக் கோரிக்கையில் AIBDPA வின் நிலைபாடு, ஓய்வூதியர்கள் அனைவரையும் சந்தித்து பென்சன் மாற்றக் கோரிக்கைக்காக போராட வேண்டியதன் அவசியம், மாவட்ட செயற்குழு முடிவுகள் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் AIBDPA மாவட்ட மாநாட்டு நிதியாக ₹4000/ உடனடியாக தோழர்கள் வழங்கினர்.
இறுதியாக தோழர் குபேரன் அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
0 Comments