Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் AIBDPA ராசிபுரம் கிளை கூட்டம்

சேலம் மாவட்டம் AIBDPA ராசிபுரம் கிளை கூட்டம்

 




             சேலம் மாவட்டம் AIBDPA ராசிபுரம் கிளைக்கூட்டம் 11.12.2023 ல் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் தோழர் P.A.ஆறுமுகம் DOS வரவேற்புரை நிகழ்த்தினார்.

     AIBDPA மா.சி.அழைப்பாளர் தோழர் P.ராமசாமி அவர்கள் துவக்க உரையில் மத்திய அரசின் தவறான கொள்கைகளை விளக்கி, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறினார். AIBDPA மாவட்ட உதவிச் செயலாளர் தோழர் S.அழகிரிசாமி தனது உரையில் நமது போராட்ட அணுகுமுறை பற்றிக் கூறினார். AIBDPA தலைவர்களில் ஒருவரான தோழர் P. தங்கராஜு டெல்லியில் நாம் நடத்திய போராட்ட இயக்கங்கள் உட்பட பல்வேறு அனுபவங்களைக் கூறினார். தோழர் S. கணேசன் BS BSNLEU வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்டச் செயலாளர் தோழர் S. தமிழ்மணி புனே மத்திய செயற்குழு முடிவுகள், பென்சன் மாற்றக் கோரிக்கையில் AIBDPA வின் நிலைபாடு, ஓய்வூதியர்கள் அனைவரையும் சந்தித்து பென்சன் மாற்றக் கோரிக்கை பற்றி பிரச்சாரம் செய்வது, கோரிக்கையை வென்றுடெடுக்க போராட வேண்டியதன் அவசியம், மாவட்ட செயற்குழு முடிவுகள் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
மூத்த தோழர் P.சண்முகம் STS Retd அவர்கள் மோடி அரசை அகற்ற 2024 ல் அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்திக் கூறி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூட்டத்தில் AIBDPA மாவட்ட மாநாட்டு நிதியாக ₹8000/ உடனடியாக தோழர்கள் வழங்கினர்.

இறுதியாக தோழர் ரங்கசாமி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA

Post a Comment

0 Comments