Latest

10/recent/ticker-posts

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் ஓய்வூதிய மாற்றம் குறித்த பிரச்சார இயக்கம் மற்றும் சிறப்பு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் ஓய்வூதிய மாற்றம் குறித்த பிரச்சார இயக்கம் மற்றும் சிறப்பு கூட்டம்

 




  

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

         மத்திய மாநில சங்கங்களின் செயற்குழு கூட்ட முடிவின்படி நமது தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை சிறப்பு கூட்டம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் குறித்து விரிவான பிரச்சார இயக்கம் இன்று 06-12-2023 காலை 11 மணி அளவில் கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி தலைமையில் நடைபெற்றது. தோழர். P. பாலகிருஷ்ணன் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர். S. ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.

     முன்னதாக பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கார் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அனைவரும் மரியாதை செய்தனர்.

      கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எட்டு பக்க அறிக்கையை கொடுத்து அதை விளக்கி மத்தியச் சங்க துணைத் தலைவர் தோழர் எஸ். மோகன்தாஸ் மற்றும் மாவட்டச் செயலர் தோழர். பெ.ராமர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன், மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. சுப்பையா வாழ்த்துரை வழங்கினர். 38க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் நிறைவாக கிளை உதவித் தலைவர் தோழர். P. முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

தோழர். S. ஆறுமுகம்
கிளைச் செயலர்
கோவில்பட்டி கிளை

Post a Comment

0 Comments