Latest

10/recent/ticker-posts

மிகவும் உற்சாகமாக, சிறப்பான முறையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மாநாடு.

மிகவும் உற்சாகமாக, சிறப்பான முறையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மாநாடு.

    





            இன்று 17.12.23 ஈரோடு N R திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் தோழர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தேசிய கொடியை தோழர். மயில்சாமி அவர்களும், சங்கக்கொடியை தோழர். சின்னையன் அவர்களும் ஏற்றி வைத்தனர். மாவட்டச் செயலாளர் தோழர். P. சின்னசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

  



                 மாவட்ட மாநாட்டினை தமிழ் மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் பொது அரங்கம் துவங்கியது. மாவட்ட துணை தலைவர் தோழர். C. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி பொது அரங்கின் நோக்கம் மற்றும் நிர்வாகத்துடன் உள்ள உறவு பற்றி பேசினார். மாநில துணை தலைவர் தோழர் குப்புசாமி அவர்கள், மாவட்ட BSNL துணை பொதுமேலாளர் திரு சாம் குணாளன் ஆகியோர் பேசினார்கள்.

  



          தட்சிண இரயில்வே பென்சனர் சங்க மாநில தலைவர் தோழர். இளங்கோவன் பென்சன் - நம் முன்னாள் உள்ள சவால்கள் பற்றி சிறப்பாக பேசினார்கள். தோழர் K.N.முகமது ரபி நன்றி கூறினார்.

மதிய உணவுக்கு பின்னர் பொருளாய்வுகுழு துவங்கியது.

பொருளாய்வுகுழுவில் தோழர்கள்
R.முருகேசன் தலைவர் NCCPA
S. பாலு மாவட்ட செயலாளர் BSNLEU.
N. ராமசாமி மாவட்ட செயலாளர் AIPRPU
S. சையது இத்ரீஸ் மாநில செயலாளர் TNTCWU .
வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் 75 வயது நிரம்பிய தோழர்கள்
N. சின்னையன்
நடராஜன் ஈரோடு
S. கஸ்தூரி ஈரோடு
A. சிவஞானம் ஈரோடு
M. P. சுப்பிரமணியம் ஊத்துக்குளி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

பொது அரங்கை அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர். V. வெங்கட் ராமன் அவர்கள் துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சின்னசாமி அறிமுகப்படுத்தினார். நிதி நிலை அறிக்கையை மாவட்டப் பொருளாளர் தோழர். V. மணியன் சமர்ப்பித்தார்.

               அறிக்கையை மீது தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் விவாதத்தில் கலந்து கொண்டு தீர்வு காண வேண்டிய பிரச்சினைகள் மீது மாநில சங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். மாவட்ட செயலாளர் தொகுப்புரைக்கு பின்னர் வேலை மற்றும் நிதி நிலை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தோழியர் ஆலிஸ் தமிழ் செல்வராணி, தோழர் வீரப்பன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வை மாநில செயலாளர் நடத்தி வைத்தார்.

                புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில துணை செயலாளர் தோழர் பரமேஸ்வரன் அவர்கள் பேசினார். தோழர் V மணியன் அவர்கள் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில் பிரதிநிதிகள் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் என 203 பேர் கலந்து கொண்டனர். மாநில சங்கத்தில் இருந்து தோழர் நிசார் அகமது கோவை கலந்து கொண்டார்.

புதிய நிர்வாகிகள்.

மாவட்ட தலைவர் : தோழர். P. சின்னசாமி.

மாவட்ட செயலாளர் : தோழர் N. குப்புசாமி.

மாவட்ட பொருளாளர் : தோழர் V. மணியன்.

சின்னசாமி மாவட்ட தலைவர். AIBDPA-ஈரோடு

Post a Comment

0 Comments