Latest

10/recent/ticker-posts

நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் கிளை சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்

நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் கிளையில் சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்


வணக்கம் தோழர்களே...!!!

        அகில இந்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 13.12.23 அன்று நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கிளையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் தோழர். S. K. மாரியப்பன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை அனைவரையும் வரவேற்று பேசினார்.

      மாவட்ட உதவி தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் அகில இந்திய செயற்குழு முடிவுகள் பற்றியும், சம்பளக் கமிஷனில் ஏற்பட்டிருக்கும் நிலைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். அம்பாசமுத்திரம் கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர். V. ராமநாதன் நன்றி கூறினார். சிறப்புக் கூட்டம் நடத்திய சங்கரன்கோவில் கிளையையும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட உதவித் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் அவர்களையும் மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டி புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்,
ச.முத்துசாமி,
மாவட்ட செயலாளர்,
நெல்லை மாவட்டம்.
13/12/2023.

Post a Comment

0 Comments