Latest

10/recent/ticker-posts

சேலம் மெயின், மெய்யனூர் கிளைகளின் இணைந்த மாநாடு

சேலம் மெயின், மெய்யனூர் கிளைகளின் இணைந்த மாநாடு





   9.12.2023 சனியன்று சேலம் நகரக் கிளைகளின் கூட்டு மாநாடு தோழர்கள் பொன்னுவேல், மணி ஆகியோர் தலைமையில் BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.

தோழர் ராமலிங்கம் அவர்களின் அஞ்சலி உரைக்குப் பின் தோழர் P. சம்பத் BS MEY வரவேற்பு உரை ஆற்றினார்.

தோழர் E. கோபால் DS BSNLEU அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். அவரது உரையில் அரசின் கார்பரேட் ஆதரவு கொள்கை, கோரிக்கைகளில் நமது நிலைபாடு, பென்சன் மாற்ற கோரிக்கையில் AIBDPA வின் சரியான போராட்ட அணுகுமுறை ஆகியவை பற்றி எடுத்துக் கூறினார்.

தோழர்கள் S.அழகிரிசாமி ADS, S.தமிழ்மணி DS, M.மதியழகன் DP ஆகியோர் பென்சன் மாற்றக் கோரிக்கையில் Delinking wage revision, IDA வில் உயர் பென்சன், 15% Fitment ஆகியவை பற்றியும், நமது போராட்டங்கள் பற்றியும் கூறினார்.

ஆண்டறிக்கை, வரவு செலவு ஏகமனதான ஏற்பிற்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மெயின் கிளைக்கு தலைவர், செயலர், பொருளராக முறையே S.தமிழரசன் OS Retd, D.சுப்பிரமணி TT Retd, இளங்கோவன் TT Retd ஆகியோரும்
மெய்யனூர் கிளைக்கு A. மணி OS Retd, P. சம்பத் TT Retd, அசோகன் TT Retd ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை தோழர் P.ராமசாமி மாநில சிறப்பு அழைப்பாளர், தோழர் B.சுதாகரன் DVP, தோழர் M. செல்வம் DS TNTCWU , தோழர் P.M.ராஜேந்திரன் BS RSP ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டுக் கிளை மாநாடு நிறைவுற்றது.

தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA சேலம்

Post a Comment

0 Comments