Latest

10/recent/ticker-posts

BSNLEU-AIBDPA-TNTCWU - இணைந்த CoC சார்பில் ஓமலூர் கிளைக் கூட்டம்

BSNLEU-AIBDPA-TNTCWU - இணைந்த CoC சார்பில் ஓமலூர் கிளைக் கூட்டம்

 





                19.12.2023 இன்று ஓமலூரில் CoC சார்பில் கிளைக் கூட்டம் நடைபெற்றது. தோழர். N. கௌசல்யன் BS AIBDPA தலைமை ஏற்றார். தோழர். S. சமரன் BS BSNLEU வரவேற்புரை நிகழ்த்தினார்.

                 தோழர். S. தமிழ்மணி DS AIBDPA துவக்க உரையில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு, பணியில் இருக்கும் ஊழியர் பிரச்சினைகள், ஓய்வூதிய மாற்றத்தில் AIBDPAவின் நிலைபாடு, அரசின் மக்கள் விரோத கொள்கைகள், AIBDPA கிளை மாநாடு, சேலம் மாவட்ட மாநாடு போன்றவற்றை எடுத்துரைத்தார்.

             தோழர் E. கோபால் DS BSNLEU அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் BSNLEU மத்திய செயற்குழு முடிவுகள், நமது அடுத்த கட்ட இயக்கங்கள் பற்றி கூறினார். தோழர் K. ராஜன் DP TNTCWU அவர்கள் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தார்.

               தோழர். S.அழகிரிசாமி ADS AIBDPA அவர்கள் மத்திய அரசின் தனியார் ஆதரவுக் கொள்கைகள், தொழிலாளி வர்க்கம் ஆற்றவேண்டிய கடைமைகளை விவரித்தார். தோழர். காட்டுராஜா DOS AIBDPA அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA

Post a Comment

0 Comments