Latest

10/recent/ticker-posts

BSNLEU-AIBDPA-TNTCWU - இணைந்த CoC சார்பில் ஆத்தூரில் சிறப்புக் கூட்டம்

BSNLEU-AIBDPA-TNTCWU - இணைந்த CoC சார்பில் ஆத்தூரில் சிறப்புக் கூட்டம்

 




          18.12.2023 இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் CoCயின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. தோழர். P. குமாரசாமி DOS AIBDPA தலைமை ஏற்றார். தோழர். N. மூர்த்தி BS AIBDPAவின் அஞ்சலியுரைக்குப் பின் தோழர். A. அருள்மணி BS வரவேற்புரை நிகழ்த்தினார்.

              தோழர் S. தமிழ்மணி DS AIBDPA துவக்க உரையில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு, பணியில் இருக்கும் ஊழியர் பிரச்சினைகள், ஓய்வூதிய மாற்றத்தில் AIBDPAவின் நிலைபாடு, அரசின் மக்கள் விரோத கொள்கைகள், AIBDPA கிளை மாநாடு, சேலம் மாவட்ட மாநாடு உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைத்தார்.

            தோழர் P. தங்கராஜு ABS AIBDPA, தோழர். சிவந்தன் BS TNTCWU, தோழர். வேல்விஜய் ADS BSNLEU ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின் தோழர். S. ஹரிஹரன் ACS BSNLEU நிறைவுரை ஆற்றினார். அவர்தம் உரையில் BSNLEU மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கிக் கூறினார். இறுதியாக, தோழியர் ராணி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

தோழமையுள்ள,
S. தமிழ்மணி DS AIBDPA

Post a Comment

0 Comments