Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிளை கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிளை கூட்டம்




                           இன்று (27.06.2024ல்) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிளையின் கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் தோழர் S.வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி உரையினை மாவட்ட உதவிச் செயலர் தோழர்.  V.குணசேகரன் நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழர். P. முருகபெருமாள் வரவேற்புரையாற்றினார். 

                    AIBDPA மத்தியச் சங்க துணைத் தலைவர் தோழர் எஸ். மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், ஏதென்ஸில் நடைபெற்ற TUI (R&P) மாநாட்டு நிகழ்வுகள், சென்னையில்  நடைபெற்ற NCCPA மாநாடு அதன் இன்றைய அறைகூவல்கள் மற்றும் புதுச்சேரி மாநில செயற்குழு முடிவுகள், BSNL /MTNL ஓய்வூதியர் கூட்டு போராட்டகுழு போராட்டங்களை விரிவாக எடுத்துறைத்தார். போராட்டங்கள் மற்றும் மாநாடுகளின் செலவினங்களை ஈடுகட்ட தாராளமாக நிதி வழங்கிட கேட்டுக் கொண்டார்.

        தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் பெ.ராமர் தனது துவக்க உரையில் தலமட்ட பிரச்சனைகளில் மாநில மாவட்டச் சங்கங்களின் தலையீட்டினால் பிரச்சனைகளில் ஏற்பட்ட தீர்வுகள், BSNL /MTNL ஓய்வூதியர் சங்க கூட்டு போராட்டகுழு போராட்டங்களை முன்னெடுப்பதும், நமது மாவட்டத்தில் ஜூலை 2 ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திட கூடுதல் தோழர்களை திரட்டிவர வேண்டுகோள் விடுத்தார். மேலும் BSNL MRS CGHS விபரங்களையும் விளக்கி கூறினார். தரைவழி தொலைபேசி பிரச்சனை, MRS மறு மதிப்பீடு,  மேலும் மாநில செயற்குழு முடிவுகளாக உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்த கேட்டுக் கொண்டார். மாவட்ட மாநில மாநாடுகளையும் வரவிருக்கும் காலங்களில் மாவட்ட மாநில டெல்லி போராட்டங்களை ஈடுகட்ட தேவையான நிதிகளை தந்து உதவிட வேண்டும் எனவும் நிதி கோரிக்கையை முன்வைத்தார்

             மாவட்டச் சங்கம் செயல்பாடுகளை விளக்கியதோடு கூட்டத்திற்கு கூடுதல் தோழர்களை வரவைப்பதும் செலவினங்களை ஈடுகட்ட  நிதி  வழங்கிடக் கேட்டு மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் வாழ்த்துரை வழங்கினார். 

                    கிளைக் கூட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை பொருளாளர் தோழர்.I.ஜெபமணி நன்றி கூறினார். சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்த கிளை நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 

இவண் 
பெ.ராமர், AIBDPA,
மாவட்ட செயலாளர்.

தூத்துக்குடி மாவட்டம்

Post a Comment

0 Comments