Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்




அன்புத் தோழர்களே ! வணக்கம்.

         AIBDPA தூத்துக்குடி மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம் இன்று 04-03-2025ல் தூத்துக்குடி  மாசிலாமணிபுரம் 3வது தெரு, தோழர். P C வேலாயுதம் அரங்கில் வைத்து தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது. தோழர். K. சுப்பையா மாவட்ட உதவிச் செயலர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். தோழர். V. குணசேகரன் மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். T. சுப்பிரமணியன் மாவட்டத் தலைவர் தலைமை உரையாற்றினார்.

           அகில இந்திய உதவித் தலைவர் S. மோகன்தாஸ் துவக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் மாநிலச் செயற்குழு முடிவுகளான ஓய்வூதியர் முழக்கம்,  சந்தா ரூ 500/- , சங்க செயல்பாடுகளை முன்னெடுக்க ஆண்டு நன்கொடை ரூ 200/-, மகளிர் கிளை, மகளீர் தினம் கொண்டாட்டம், இன்றைய தேசிய பிரச்சனைகள், மத்திய மாநில சங்க செயல்பாடுகளை விளக்கி உரையாற்றினார்.

                 செயல்பாட்டு அறிக்கை முன் வைத்து மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் உரையாற்றினார். அவர் தனது உரையில் கிளைகளின் செயல்பாடுகளை விரைவு படுத்துவது மாநில மாநாடு& மாநிலச் செயற்குழு முடிவுகளான ஓய்வூதியர் முழக்கம்,  சந்தா ரூ 500/- , சங்க செயல்பாடுகளை முன்னெடுக்க ஆண்டு நன்கொடை ரூ 200/- ஆகியவற்றை விரைவுபடுத்தி வழங்கிட கேட்டுக் கொண்டார்.  இன்றைய அளவில் மாவட்டத்தின் நிதிநிலை விபரங்களை முன்வைத்து மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் அறிக்கையிட்டார். தணிக்கை செய்யப்பட்ட கடந்த மாநாட்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். விவாதத்தில் பல தோழர்கள் கலந்துகொண்டனர். மேலும் விடுபட்ட பிரச்சனைகளை முன்வைத்து கிளைச் செயலர்கள் பேசினர். விவாதங்களுக்கு விளக்கம் அளித்து மாவட்டச் செயலர் பேசினார். செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை ஏகமனதாக ஏற்றிக்கொள்ளப்பட்டது.

நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர் K.கணேசன் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.

தோழமையுடன்
பெ.ராமர்
மாவட்டச்செயலர்
தூத்துக்குடி.

Post a Comment

0 Comments