சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லில் புதிய AIBDPA கிளை உதயம்.
நாமக்கல் NGO ஹாலில் 12.08.2017 அன்று சேலம் மாவட்ட செயற்குழுவும் நாமக்கல் பகுதி புதிய கிளை துவக்க நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் ஓய்வூதியர் தோழர். V. கோபால் STS RTD சிறப்பான முயற்சியின் காரணமாக 25 தோழர்களிடம் உடனே ஆண்டுச் சந்தா வசூலித்து அவர்களின் ஆதரவுடன் புதிய AIBDPA கிளையை நாமக்கல்லில் துவங்கப்பட்டது. கிளை துவக்க நிகழ்ச்சிக்கு தோழர். V. கோபால் STS Rtd தலைமையேற்றார். மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். N. சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு சிறப்புரையும் ஆற்றினர். ABDPA ஈரோடு மாவட்டத் தலைவர் தோழர். சிவஞானம், நாமக்கல் BSNLEU கிளைச் செயலர் தோழர். பாலசுப்பிரமணியன், BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர். ராமசாமி, BSNLEU JCM உறுப்பினர் தோழர். K.M. செல்வராஜ், AIBDPA மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். T. பழனி வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கிளையின் புதிய நிர்வாகிகளாக
கிளைத் தலைவர் தோழர். A. அங்குராஜ், TM Rtd
கிளச் செயலர் தோழர். V. கோபால், STS Rtd
கிளைப் பொருளாளர் தோழர். V..K. ராமசாமி
ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக துவங்கப்பட்ட கிளையையும், அதன் நிர்வாகிகளையும், கிளை துவங்க பாடுபட்ட அனைத்து தோழர்களையும் சேலம் மாவட்டச் சங்கமும், தமிழ்மாநிலச் சங்கமும் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.
பின்னர் மாவட்டச் செயற்குழு மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். I. M. மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு மாவட்டச் செயல்பாட்டறிக்கையை முன் வைத்துஉரை நிகழ்த்தினார்.
மாவட்டச் சங்க செயல்பாடு, அமைப்பு நிலை, விவாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு, மேட்டூர், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளில் புதிய கிளை துவங்கிட ஆலோசிக்கப்பட்டது. மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். N. சின்னையன் ஆகியோர் மாவட்டச் செயற்குழுவில் சிறப்புரை ஆற்றினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.