தூத்துக்குடியில் கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்

தூத்துக்குடியில் கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்.

Jpeg

Jpeg

Jpeg

   தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம் 12.08.2017 அன்று கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அஞ்சலிஉரை நிகழ்த்தினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

     மாவட்டச் செயலர் தோழர். P. ராமர்மாவட்டச் செயல்பாடுகள், கடந்த கூட்டத்திற்கு பின் நடைபெற்ற மத்தியச் சங்க அறைகூவல் போராட்டங்கள், BSNL அதிகாரிகள் ஊழியர் சங்க போராட்டங்களில் கலந்து கொண்ட விபரங்களையும் இன்றைய நடைமுறை அரசியல் பிரச்சனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

       பின்னர் அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 78.2{1c5a0a54b351b350fe1a721d4c0d403d3cf36a808bcd6634754d06ca38aacf8d} சத நிலுவைத்தொகையில் உள்ள பிரச்சனைகளையும் நமது சங்கம் எடுத்த நடவடிக்கையின் மூலம் கிடைத்த மருத்துவப்படி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பு என போராட்டங்களின் வெற்றியை எடுத்துரைத்தார். மேலும் ஓய்வூதிய உயர்வு பெற போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். பணமதிப்பு இழப்பு, கால்நடை பராமரிப்பு வரன்முறைச் சட்டம் 2017, நீட் தேர்வு, GSTவரி விதிப்பு பாதிப்பு இவற்றால் தொழில்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்புகளையும் புள்ளி விபரங்களோடு விளக்கிப் பேசினார். இன்றைய அரசியல் நடைமுறையில் மக்கள் படும் துன்பங்களையும் பொருளாதார இழப்புகளையும் விளக்கி கூறினார்.

  30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிய உறுப்பினராக தோழர். A. தங்கவேல்பாண்டி ஆயுள் சந்தா வழங்கினார். தோழர். S. ஸ்டீபன் ஜெயபால் நன்கொடை வழங்கினார் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். K.சுப்பையா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

Leave a Reply