AIBDPA சென்னை மாநிலச்சங்க அமைப்புதின மாநாடு.
May 11, 2015
Author: aibdpatnc
11-05-2015 AIBDPA சென்னை மாநிலச்சங்கம் உதயம்.
இன்று AIBDPA சென்னைமாநிலச் சங்கத்தை முறையாக தனி மாநிலச் சங்கமாக தோழர். K.G.ஜெயராஜ், அகில இந்திய பொதுச் செயலர் துவக்கி வைத்தார்.
அமைப்பு தின மாநாட்டை தோழர். B. சுப்பிரமணியன் தலைமையேற்றார்.
தேசியக்கொடியினை தோழியர். செண்பகவல்லியும், சங்கக்கொடியை பொதுச் செயலர் தோழர்.K.G.ஜெயராஜும் ஏற்றி வைத்தனர். தியாகிகளுக்கு அஞ்சலியை தோழர்.N.V.N. பாலகிருஷ்ணனும், தோழர். G.S. நரசிம்மன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். M. மோகன்தாஸ், AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. ஆறுமுகம், BSNLEU சென்னை மாநிலச் செயலர் தோழர். K. கோவிந்தராஜ் ஆகியோர் அமைப்பு மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.
2015 மே 16,17,18 தேதிகளில் விருதுநகரில் நடைபெறும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டிற்கு AIBDPA சென்னை மாநில அமைப்பு மாநாடு ரூபாய் 5000/- நன்கொடை வழங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.